என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமூக வலைத்தளம்"
- சாதனையானது டஸ்கெகி தேசிய வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது.
- அபுபக்கரின் சாதனைக்காக சமூக ஊடக பயனர்கள் அவரை பாராட்டினர்.
உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை கட்டிப்பிடித்து ஒரு வாலிபர் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கானாவை சேர்ந்தவர் அபுபக்கர் தாஹிரு. 29 வயதான இவர் வனவியல் ஆர்வலர் ஆவார். இவர் ஒரு மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனை தொடர்பான வீடியோவை உலக கின்னஸ் சாதனை நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது. அதன்படி சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 19 மரங்களை கட்டிப்பிடித்துள்ளார்.
இந்த சாதனையானது டஸ்கெகி தேசிய வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் பகிரப்பட்ட இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலானது. அபுபக்கரின் சாதனைக்காக சமூக ஊடக பயனர்கள் அவரை பாராட்டினர்.
சாதனை பற்றி அபுபக்கர் கூறுகையில், இந்த உலக சாதனையை அடைவது நம்ப முடியாத அளவுக்கு வெகுமதி அளிக்கிறது. இது நமது சுற்றுச்சூழல் அமைப்பின் மரங்களின் முக்கிய பங்கை எடுத்து காட்டுவதற்கான ஒரு அர்த்தமுள்ள செயலாகும் என்றார்.
- செயற்கை பற்களை 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்து இதுவரை சுமார் ரூ.1½ கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார்.
- மருத்துவமனையில் அடிக்கடி பற்கள் காணாமல் போவதை அறிந்த நிர்வாகம் இது தொடர்பாக ஆய்வு செய்த போது டாக்டரின் திருட்டு அம்பலமானது.
சில மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் திருடி விற்கப்படுவதாக அவ்வப்போது அதிர்ச்சி செய்திகள் வெளியாகும். அந்த வகையில் ஜப்பானில் பற்களை திருடி விற்ற டாக்டர் ஒருவர் போலீசாரிடம் சிக்கி இருப்பது பேசுபொருளாகி உள்ளது.
அங்குள்ள கியூஷு மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவராக பணியாற்றி வந்த அந்த டாக்டர் மருத்துவமனையில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த பழைய வெள்ளி பற்களை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளார்.
அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததால் அவரால் அனைத்து அறைகளுக்குள்ளும் சென்று வர முடிந்த நிலையில், நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்டு அறையினுள் மறு சுழற்சிக்காக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த செயற்கை பற்களை 10 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்து இதுவரை சுமார் ரூ.1½ கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் அடிக்கடி பற்கள் காணாமல் போவதை அறிந்த நிர்வாகம் இது தொடர்பாக ஆய்வு செய்த போது டாக்டரின் திருட்டு அம்பலமானது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
- சந்திரிகா ஆடம்பரமான போர்டு மஸ்டாங்க் காரில் வந்து இறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் விரைவில் பெரிய செய்தி காத்திருக்கிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகம் விற்பனை செய்யப்படும் நொறுக்குத்தீனி உணவு வகைகளில் ஒன்று 'வடா பாவ்'. குறிப்பாக தெருவோர கடைகளில் இவற்றின் விற்பனை அதிகளவில் நடைபெறும்.
டெல்லியில் உள்ள மோங்கோல்புரி பகுதியில் வடா பாவ் கடை நடத்தி வரும் இளம்பெண் சந்திரிகா தீட்சித் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். 'வடா பாவ் கேர்ள்' என அழைக்கப்படும் இவர் சமீபத்தில் தனது கடைக்கு அருகே சிறப்பு 'வடா பாவ்' திருவிழா நடத்தினார். அப்போது சாலையில் ஏற்பட்ட கூட்டத்தால் டெல்லி போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் தற்போது சந்திரிகா ஆடம்பரமான போர்டு மஸ்டாங்க் காரில் வந்து இறங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், காரை ஓட்டி வரும் சந்திரிகா கையில் வடா பாவுடன் இறங்கும் காட்சிகள் உள்ளன. அந்த காரின் மதிப்பு ரூ.70 லட்சத்திற்கு மேல் இருக்கும்.
இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் விரைவில் பெரிய செய்தி காத்திருக்கிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- லிப்ட்டின் கதவு மூடப்பட்டவுடன், சிறுமி வலியுடன் கையை அசைப்பதை வீடியோவில் காணமுடிகிறது.
- நபர் லிப்டில் இருந்து நாயை விரட்டியவுடன் கதவு மூடப்பட்டதும் சிறுமி வலியால் துடிக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டில் சிறுமியை நாய் கடித்து குதறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நொய்டாவில் உள்ள செக்டார் 107ல் உள்ள லோட்டஸ்-300 சொசைட்டியில் சிறுமியை நாய் கடித்துள்ளது. மே 3-ந்தேதி நடந்ததாகக் கூறப்படும் இந்த முழு சம்பவமும் லிப்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த வீடியோவில், லிப்டிற்குள் இருக்கும் சிறுமியை 4-வது மாடியில் இருந்து கீழ் தளத்திற்கு வருகிறார். பின்னர் லிப்ட் 2-வது மாடியில் நின்றதும் ஒரு செல்லப்பிராணி லிப்ட்டுக்குள் நுழைந்து தனியாக இருந்த சிறுமியைக் கடிக்கிறது.
சிறுமியை நாய் கடித்தபோது ஒரு நபர் லிப்டிற்குள் சென்று நாயை விரட்டியடித்து, சிறுமியை மேலும் நாய் கடியில் இருந்து காப்பாற்றுகிறார். அந்த நபர் லிப்டில் இருந்து நாயை விரட்டியவுடன் கதவு மூடப்பட்டதும் சிறுமி வலியால் துடிக்கிறார்.
லிப்ட்டின் கதவு மூடப்பட்டவுடன், சிறுமி வலியுடன் கையை அசைப்பதை வீடியோவில் காணமுடிகிறது.
சென்னையில் உள்ள பூங்காவில் இரண்டு செல்லப்பிராணி நாய்களால் தாக்கப்பட்டதில் ஐந்து வயது சிறுமி பலத்த காயம் அடைந்த ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
In Lotus 300 Society located in Sector 107 of Noida, a dog entered the lift and Bit, scratched a girl
— Ghar Ke Kalesh (@gharkekalesh) May 8, 2024
pic.twitter.com/VurplrEJVF
- பதிவு 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாக பரவியது.
- பயனர்கள் பலரும் பொது சுகாதார விழிப்புணர்வுக்காக குரல் கொடுக்கும் டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தியை பாராட்டி பதிவிட்டனர்.
சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் சமீபத்தில் 23 வயது இளம்பெண் ஒருவர் புகை பிடிக்காதவர்களை தோல்வி அடைந்தவர்கள் என்று விமர்சித்து பதிவிட்டு இருந்தார். அதில், ஒரு நபர் சிகரெட் மற்றும் ஒரு கோப்பை தேநீர் வைத்திருக்கும் புகைப்படம் இருந்தது. அவரது இந்த பதிவு வைரலான நிலையில் பெங்களூருவை சேர்ந்த டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தி அந்த பெண்ணின் பதிவை கடுமையாக சாடி உள்ளார்.
Hey smokers and losers (non smokers) wyd? pic.twitter.com/2HdWsy1JRc
— desi theka (@sushihat3r) May 5, 2024
அதோடு புகை பிடிக்காதவர்களை குறிவைத்து இழிவான கருத்துக்களுக்கு எதிராக ஒருநிலைப்பாட்டை எடுத்து, புகைபிடிப்பதால் ஒருவரது உடல் நலத்திற்கு ஏற்படும் தீமைகளை விளக்கி இருந்தார். அவரது இந்த பதிவு 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாக பரவியது. இதை பார்த்த பயனர் ஒருவர் புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு அதன் விளைவை குறைக்க முடியுமா? என்று கேட்டார்.
மற்றொருவர் ஏன் புகை பிடிக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை என பதிவிட்டு இருந்தார். பயனர்கள் பலரும் பொது சுகாதார விழிப்புணர்வுக்காக குரல் கொடுக்கும் டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தியை பாராட்டி பதிவிட்டனர்.
The youngest patient I've sent for a triple bypass surgery was a 23y old girl smoker. #HeartAttack #MedTwitter
— Dr Deepak Krishnamurthy (@DrDeepakKrishn1) May 6, 2024
Be a loser (as per this lady) and live healthy. https://t.co/TsJI8qFrWG
- வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
- மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரதட்சணை அதிகம் கேட்டு கொடுக்க முடியாததால் கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவங்களை கேள்விபட்டிருப்போம். ஆனால் தான் சீதனமாக கேட்ட காருக்கு பதிலாக புதிதாக வேறு காரை வழங்கியதால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
அங்குள்ள முசாபர் நகரை சேர்ந்தவர் அமீர் ஆலம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. மணமகன் தனக்கு வரதட்சணையாக ஹூண்டாய் காரை கேட்டிருந்தார். ஆனால் மணமகளின் குடும்பத்தினர் அவருக்கு மாருதி காரை சீதனமாக அளித்துள்ளனர். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்தினார்.
இதனால் பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். திருமணம் பாதியில் நின்றதை அறிந்து சோகம் அடைந்த மணப்பெண் தனது நிலை குறித்தும், குடும்பத்தினரின் துயரம் குறித்தும் இதுபோன்ற ஆண்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
हो रहा था बारात का इंतज़ार.. दूल्हे ने की 'ना' के बाद निकाह से पहले ही हुआ ब्रेकअप, बिलख उठी दुल्हन
— TRUE STORY (@TrueStoryUP) May 5, 2024
...
दूल्हे को क्रेटा कार पसंद थी.. लड़की पक्ष ले आया वेगनार.. गुस्साए दूल्हा नहीं लाया बारात.. लड़की के घर पर मचा कोहराम
UP : मुज़फ्फरनगर के रसूलपुर दभेडी में लालची दूल्हे ने ऐन… pic.twitter.com/ivWX0JkJeo
- தனது கணவர் மீண்டும் சுயநினைவுக்கு திரும்புவார் என சன்ஹாங்சியா உறுதியாக நம்பினார்.
- வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் இதுதான் உண்மையான காதல் என பதிவிட்டு வருகின்றனர்.
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இதனால் கோமா நிலைக்கு சென்ற அவர் அதன் பிறகு சுயநினைவுக்கு திரும்பவில்லை. ஆண்டுகள் பல கடந்த போதும் அவருக்கு நினைவு திரும்பாததால் அவரது மனைவி சன்ஹாங்சியா மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனாலும் தனது கணவர் மீண்டும் சுயநினைவுக்கு திரும்புவார் என சன்ஹாங்சியா உறுதியாக நம்பினார். மேலும் கணவர் மீது மிகவும் அன்பு செலுத்திய அவர் வீட்டில் கணவரை தொடர்ந்து கவனித்து வந்தார். இதன் பயனாக அவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோமாவில் இருந்து மீண்டுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சீனாவில் உள்ள சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அதில், படுக்கையில் விழித்திருக்கும் கணவரின் அருகில் சன்ஹாங்சியா அமர்ந்திருக்கும் காட்சிகளும் கடந்த சில வருடங்களாகவே அவர் அனுபவித்த வலிகளை பற்றி கூறும் காட்சிகளும் உள்ளது.
அப்போது அவரது கணவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் இதுதான் உண்மையான காதல் என பதிவிட்டு வருகின்றனர்.
- சுதா ரெட்டியின் ஸ்டைலான உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
- சுதா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலை மற்றும் பேஷனின் தீவிர ஆர்வலராக தன்னை விவரித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் மெட்காலா எனும் பேஷன் நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர்- நடிகைகள், பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் இருந்து பலரும் பங்கேற்ற நிலையில், அவர்கள் அணிந்து வந்த ஆடைகள் மற்றும் நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. நிகழ்ச்சியில் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபராக வலம் வரும் ஐதராபாத்தை சேர்ந்த கோடீஸ்வரரான மேகா கிருஷ்ணாரெட்டியின் மனைவியான சுதா ரெட்டி, ஐவெரி பட்டு கவுன் அணிந்து பங்கேற்றார். அவரது ஸ்டைலான உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
சுதா ரெட்டி 180 காரட் வைர நெக்லசை அணிந்திருந்தார். அதில் 25 காரட் இதய வடிவ வைரமும், மேலும் மூன்று 20 காரட் இதய வடிவிலான வைரங்களும் அணிந்திருந்தார். இதுதவிர 23 காரட் வைர சாலிடர் மோதிரத்தையும், 20 காரட் வைர சொலிடர் மோதிரத்தையும் அணிந்திருந்தார். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.165 கோடி என கூறப்படுகிறது.
சுதா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலை மற்றும் பேஷனின் தீவிர ஆர்வலராக தன்னை விவரித்துள்ளார்.
- சிறுவனின் மனித நேயத்தை பாராட்டும் வகையில் அவனுக்கு உயர்தர ஓட்டலில் உணவு வாங்கி கொடுத்தும் விளையாட்டு பொருட்களையும் பரிசளித்துள்ளார்.
- சிறுவனின் செயல் என்னை வெகுவாக கவர்ந்தது என கருத்துடன் இதுகுறித்தான சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டார்.
சிறுவன் ஒருவன் சாலையில் நின்று கொண்டிருந்த ஒருவருக்கு தன்னிடம் இருந்துள்ள ஒரு டாலரை கொடுத்த அவனுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மேட் புஸ்பைஸ். கோடீஸ்வரரான இவர் தன்னுடைய வீட்டில் திடீரென தீப்பிடித்தற்கான அலாரம் ஒலிக்கப்பட்டதால் சாதாரண உடையுடன் வீட்டைவிட்டு வெளியேறி சாலையில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற 9 வயது சிறுவன் ஒருவர் மேட் புஸ்பைசை பிச்சைக்காரன் என தவறாக எண்ணியது மட்டுமின்றி தன்னிடம் இருந்த ஒரு டாலர் பணத்தை மேட்டிடம் கொடுத்துள்ளார்.
ஆனந்தம் கலந்த அதிர்ச்சியுடன் அந்த பணத்தை பெற்று கொண்ட மேட், தான் யார் என அந்த சிறுவனுக்கு விளக்கி உள்ளார். பின்னர் அவனின் மனித நேயத்தை பாராட்டும் வகையில் அவனுக்கு உயர்தர ஓட்டலில் உணவு வாங்கி கொடுத்தும் விளையாட்டு பொருட்களையும் பரிசளித்துள்ளார். சிறுவனின் செயல் என்னை வெகுவாக கவர்ந்தது என கருத்துடன் இதுகுறித்தான சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட அமெரிக்க மீடியாக்கள் மட்டுமின்றி சமூக வலைத்தளவாசிகள் சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்து வைரலாகி வருகின்றனர்.
- கலையரங்க மேடைக்கு செல்வதற்கான படிக்கட்டுகளில் ஏற முடியாமல் தடுமாறி நின்று கொண்டிருந்தார்.
- வீடியோ தற்போது வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த ஆண்டின் மெட் காலா நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடந்தது. இந்த நிகழ்வில் சர்வதேச சினிமா பிரபலங்கள், பாப் மற்றும் ராப் இசை கலைஞர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், கோடீஸ்வர பணக்காரர்கள் ஆகியோர் கண்ணை கவரும் வகையில் விதவிதமான ஆடைகளை அணிந்தவாறு போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பர். இந்த மெட் காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாப் பாடகி ஒருவரை பாதுகாவலர்கள் ஒன்று சேர்ந்து அலேக்காக தூக்கிய சம்பவம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி டைலா. பல்வேறு வெற்றி பாடல்களை பாடியுள்ள இவர் முதன்முறையாக மெட் காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனத்தினரின் ஆடையை அவர் அணிந்திருந்தார். கடற்கரை மணலை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்தவாறு அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.
அப்போது கலையரங்க மேடைக்கு செல்வதற்கான படிக்கட்டுகளில் ஏற முடியாமல் தடுமாறி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை அலேக்காக தூக்கினர். பின்னர் படிக்கட்டுகளில் டைலாவை ஏந்தி சென்று மேடையில் விட்டனர். அப்போதும் அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்தவாறே இருந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.
- வீட்டின் கழிவறைக்குள் ஒரு பாம்பு இருக்கும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
- பாம்பை சர்ப்மித்ரா அசால்டாக கைகளால் பிடித்து அப்புறப்படுத்தும் காட்சிகள் பயனர்களை வியக்க வைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டம் அகில்யா நகரை சேர்ந்தவர் சர்ப்மித்ரா சிடல்காரா என்கிற சிட்டு. இவர் பாம்பு பிடிக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலமானவர்.
அந்த வகையில் சமீபத்தில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கழிவறைக்குள் புகுந்த பாம்பை லாவகமாக பிடித்து அப்புறப்படுத்திய காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
அதில் வீட்டின் கழிவறைக்குள் ஒரு பாம்பு இருக்கும் காட்சிகளுடன் தொடங்குகிறது. பின்னர் கழிவறையில் இருந்து பாம்பு வெளியே வர முயற்சிப்பது போன்ற காட்சிகள் உள்ளது. அந்த பாம்பை சர்ப்மித்ரா அசால்டாக கைகளால் பிடித்து அப்புறப்படுத்தும் காட்சிகள் பயனர்களை வியக்க வைத்துள்ளது.
- மகளுக்கு வழங்கப்பட்ட விவரங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
- மாணவியின் மதிப்பெண் விபரங்கள் சரி செய்யப்பட்டன.
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 4-ம் வகுப்பு படித்து வரும் மாணவி மனிஷாபாய் வம்சிபிள் என்ற மாணவி எழுதிய தேர்வுகளில் குஜராத்தி மற்றும் கணித பாடங்களில் தேர்வு மதிப்பெண் அதிகபட்சமாக 200-க்கு 211 மற்றும் 212 பெற்றதாக முடிவுகள் வழங்கப்பட்டது. இதனை பார்த்து ஆச்சரியம் அடைந்த மாணவி தனது மதிப்பெண் சான்றிதழை தனது வீட்டிற்கு கொண்டு சென்று பெற்றோரிடம் காட்டினார். இதைப்பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் தங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட விவரங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கல்வி அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். அப்போது தேர்வு முடிவுகளை தொகுத்த போது பிழை ஏற்பட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாணவியின் மதிப்பெண் விபரங்கள் சரி செய்யப்பட்டன. அதன் படி மாணவி குஜராத்தி பாடத்தில் 200-க்கு 191 மதிப்பெண்களும், கணிதத்தில் 200-க்கு 190 மதிப்பெண்களும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்